நான் கல்லூரியில் படிக்கும்போது கேட்டு கேட்டு புளித்துப்போன உறுதிமொழிகள்: மச்சி, இந்த நியூ இயர்லேருந்து தண்ணி,தம்ம விடப் போறேன்டா...அவள இனி பார்க்கவே போறதில்லடா.. இந்த செம்ல இருந்து ஆல் கிளியர் ஆகப் போறேன்...இனி வர சண்டே எல்லாம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா கேட்டுக்கு படிக்கப் போறேன்..
இவையெல்லாவற்றிலும் நான்,எனது - என்பவைதான் மேலோங்கியிருக்கும். ஆனால் இந்த வட்டங்களை தாண்டி சமுதாய நோக்கோடு எடுக்கப்படும் உறுதி மொழிகள் மிகச்சில. மாணவர்கள் கடை பிடிக்க திரு. அப்துல் கலாம் அவர்களின் இந்த உறுதிமொழிகளும் அத்தகையதே.
நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன். உழைத்து படித்து, லட்சியத்தை அடைய முயற்சிப்பேன். விடுமுறை நாளில் ஐந்து பேருக்கு, எழுத, படிக்க சொல்லித் தருவேன். வீடு, பள்ளி, கல்லுாரியில் குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, வளர்த்து பாதுகாத்து மரமாக்குவேன். மது, போதை பழக்கத்தால் துயரப்படும் ஐந்து பேரையாவது, மீட்க பாடுபடுவேன். துயரத்தோடு உள்ள ஐந்து பேருக்கு ஆறுதல் கூறி துயரத்தை நீக்க பாடுபடுவேன். ஜாதி, மத, மொழியின் பெயரில் எந்தவொரு பாகுபாடும் பாராட்டாது எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்வேன். வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயற்சிப்பேன். என் தாய், தாய் நாட்டை நேசித்து, பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பேன். [நன்றி:தினமலர்]
யோசித்து பார்க்கையில் இவை மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லையெனப் புலப்படுகிறது.
Friday, August 24, 2007
கலாம் மொழி
Posted by மா.கணேஷ் குமார் at 11:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment