இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மிகக் கஷ்டமான வேலை எதுவென்றால் அது நிச்சயமாக மக்களவை சபாநாயகர் வேலைதான். நான் படித்த கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் விஸ்வநாதன் என்றொரு தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் வந்து நின்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படிக்கும் பள்ளியில் குண்டூசி விழும் ஓசை கூட கேட்கும். அந்த அளவுக்கு பள்ளியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அவர் கூட நம் மக்களவை உறுப்பினர்களிடம் கட்டாயம் தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பார்.
பொறுமை மீறி கடைசியில் இன்று புலம்பித் தள்ளியிருக்கிறார் திரு.சோம்நாத் சாட்டர்ஜி."அடப் போங்கய்யா, இவங்களுக்கு சின்ன புள்ளைங்க தேவலாம். அதுங்க கூட கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கும்".[பார்க்க:http://www.ibnlive.com/news/parties-shield-mps-veto-punishment-proposal/47353-3.html]
இன்னொரு விஷயத்தக் கேட்டா இன்னும் பகீர்ங்குது. ஒரு நிமிஷத்துக்கு மக்களவை நடக்க ஆகும் செலவு மட்டும் 22,089 ரூபாயாம்.
திருவாளர் MP அவர்களே உங்களிடம் இரண்டு கேள்விகள்:
1. நீங்கள் களேபரம் செய்யும் இந்த இடத்தில் தான் நேரு,லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா?
2. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரும் சேர்ந்து பேசினால் யாருக்கும் எதுவும் புரியாது என்று சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அது ஏன் லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கிய உங்களுக்கு புரியவில்லை?
ஏன் சிரிக்கிறீர்கள்? புரிகிறது..அதை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களிடமே போய் கேட்க சொல்கிறீர்கள்...
Thursday, August 23, 2007
இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சொல்லுங்க விஸ்வநாதன் சார்
Posted by மா.கணேஷ் குமார் at 9:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment