1. அட இதுதாம்பா உங்க தேசிய விளையாட்டு என்று ஆசியக்கோப்பையை வென்று நமக்கு ஞாபகப்படுத்திய இந்திய ஹாக்கி அணி( தோடா, நக்கல பாரு...ஹாக்கி ஸ்டிக்க புடிச்சி பாரு அப்ப தெரியும்...).
2. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என வலுவான அணிகளை வென்று 20க்கு20 உலகக்கோப்பையை கைப்பற்றிய 'இள இரத்தம் பாய்ந்த' இந்திய கிரிக்கெட் அணி.
3. சிங்கம் சிங்கிளாதான் வரும் - என்று மெக்சிகோவில் சீறிக்காட்டி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நம் விஸ்வநாதன் ஆனந்த்.
Sunday, September 30, 2007
வாகைத்திணையில் சமீபத்தில் நான் ரசித்த மூன்று பாடல்கள்:
Posted by மா.கணேஷ் குமார் at 6:39 PM 0 comments
Saturday, September 8, 2007
அடிக்கல உதைக்கல ஆனா உசுர மட்டும் உருவி எடுத்துட்டாங்கய்யா
"டேய், பஸ்ல போகும்போது படியில் நிக்கக்கூடாது...மொட்டை மாடியில நின்னு எட்டிப்பார்க்காதே..விழுந்து கிழுந்துட போற...சைக்கிள்ல போகும்போது ஏண்டா இப்படி வேகமா போற?...மோதி கீதி தொலையப்போற" - என்று இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு மாவீரனை,
ரோட்டில் நாய் நின்றால் அதற்கு மரியாதை கொடுத்து(பயத்துல மரியாதை அதுவா வரும்) வேறு தெரு வழியாக செல்லும் அஞ்சாத சிங்கத்தை,
இரவில் வெளியில் தனியாக சென்றால் ஒற்றைக் கண்ணன் வந்து பிடித்துக் கொள்வான் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு முரட்டுக்காளையை
(அட..இத்தனை பில்டப்பும் சாட்சாத் இந்த 'கருத்து கணேசனுக்குத்தான்')
ஒரு நாள் அவனது நண்பர்கள் பார்த்து, "ஏண்டா, வெண்ணை..இந்த ஞாயிற்றுக்கிழமை சும்மாதான இருக்க, நாங்க வெளியில போலான்னு இருக்கோம், எங்க கூட வர்றியா?"னு
விளையாட்டா கேட்க,
"என்னடா, இது நம்மளயெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக்கேட்குறாங்களேன்னு உடனே ஓ.கே. சொல்லிட்டேன்".
இப்படி அவங்க என்ன அழைச்சுட்டு(உள்ளபோகும்போது உண்மையிலேயே என்ன இழுத்துட்டுத்தான் போனாங்க) போன இடம் 'SIX FLAGS'(நியூ ஜெர்சி)....அட இந்த ஊரு
கிஷ்கிந்தா..MGM தாங்க.
உள்ள கொண்டுபோய் 'கிங்டக்கா'ன்னு(kingda ka) சொல்லி சின்ன பொட்டியில உக்காரச் சொன்னாங்க. நானும் நம்பி உக்காந்துட்டேன். எடுத்தாங்கய்யா வண்டிய 128 மைல் வேகத்துல...அந்த வேகத்துல கன்னத்துல சதை மட்டும் கொஞ்சம் அதிகமா இருந்தா பிச்சிக்கிட்டு போயிருக்கும்.ஒல்லியா இருந்ததுனால தப்பிச்சேன். மேல கொண்டு போய் ஒரு செகண்டுதான் நிறுத்துனாங்க.அவ்வளவுதான், சின்னவயசுல பாஸ் ஆகிட்டு சூடம் ஏத்தாம ஏமாத்தின பக்கத்து தெரு பிள்ளையாரிலிருந்து வேண்டுமென்றே டைம்பாஸ்க்கு மொக்கை போட்டு அதில் காதில் ரத்தம் வர்ற அழுத நண்பர்கள் என நான் செய்த பாவங்கள் ஒன்றொன்றாய் நினைவில் வர மொத்தமாய் ஒரு மன்னிப்பு கேட்டேன்.
இதெல்லாம் ஒரு கணப்பொழுதுதான். அடுத்த செகண்டுலயே தலைகுப்புற தள்ளி விட்டாங்க நாலஞ்சு பனைமர உயரத்துலருந்து. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்க்கு வந்ததுபோல் இருந்தது. 'ஹைய்யா','ஹாஹா','வாவ்','ப்யூட்டிபுல்' என்று எல்லோரும் சந்தோசத்தில் கத்த(தலைகுப்புற தள்ளி விட்றாங்க, இது ஒரு சந்தோசமா? கலிமுத்திப்போச்சு) "அம்மா..." என்று ஒரு ஈனகுரல் கேட்டது. சொல்லவே தேவையில்லை. அந்த குரலுக்கு சொந்தக்காரன் மகாகணம் பொருந்திய இந்த கருத்து கணேசன் தான்.
ரெண்டு மூணு பிரட்டு பிரட்டி கொண்டு வந்து ஒரு வழியா நிறுத்தினாங்க. எங்கய்யா என் உயிருனு கேட்டா, 'அந்த ரெட்டப்பாலத்துல விழுந்துச்சே எடுத்துக்கலயா?' என்று விவேக்
ஸ்டைலில் நக்கலடிச்சாங்க. உயிரின் மகத்துவத்தை ஒரு நொடியில் புரிய வைத்த 'கிங்டக்கா' நீ எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லி அந்த இடத்திலிருந்து மெல்ல நகர்ந்தோம்.
ரொம்ப ஓவரா பேசுரன்னு நெனச்சா கொஞ்சம் கீழ இருக்க 'கிங்டக்கா' வீடியோ பாருங்க புரியும்.
http://www.youtube.com/watch?v=HN8nv4tVFuA
எங்கயாவது ஒளிஞ்சிக்க இடம் இருக்கானு தேடிப்பார்த்துட்டு இருக்கும்போது, சட்டையைப்பிடித்து கொண்டுபோய் 'சூப்பர்மேன்' ரைடுன்னு ஒன்னுல கோத்து விட்டுட்டாங்க.(அதான் கிளியரா எழுதியிருக்கான் 'சூப்பர்மேன்'னு..அப்புறம் ஏண்டா என்னை ஏத்துறீங்க?) அட...இதப்பத்தி எழுத நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. நம்மூர்ல ரோடு போடற இடம்,வீடு கட்டற இடத்துல எல்லாம் கலவை, ஜல்லி கலக்க ஒரு மிஷின் இருக்கும் பார்த்துருக்கீங்களா?...அதுக்குள்ள மாட்டுன ஜல்லியா நம்மள மாத்துற ரைடுக்கு பேர்தான் "சூப்பர்மேன்" ரைடு.
சூப்பர்மேன் : http://www.youtube.com/watch?v=f5II-Px1Xq8
பேட்மேன் : http://www.youtube.com/watch?v=OPZ0pHzJbjQ
நைட்ரோ : http://www.youtube.com/watch?v=GIP8M-iME2s
பசிக்குதுடானு பிரண்ட பாத்து கேட்டேன். இது ஒரு தப்பா?? வாடா ஆம்லெட் சாப்பிடலான்னு கூட்டிட்டு போய் "பேட்மேன்"-ல தொங்க விட்டுட்டான். ஒன்னும் புரியாம முழிச்சிட்டு ஏறி உக்கார்ந்தேன். ரெண்டு நிமிஷ்ந்தான்..சோலி முடிஞ்சுப்போச்சு. வயித்துக்குள்ள ஆம்லெட் போட வச்சுட்டாங்க. உசுர கெட்டியா புடிச்சுட்டு ஒரு வழியா இறங்கி வந்தேன். அடுத்து 'நைட்ரோ'நு ஒரு சாகச விளையாட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் கால்ல விழாத குறையா கெஞ்சி, அடம் புடிச்சி வரலனு சொல்லி ஒரு ஓரமா உக்காந்துட்டேன்.
அங்க இருந்ததுலயே எனக்கு பிடிச்சது கார் விளையாட்டுதான். காரை விட்டு இறங்கி வந்தா 'என்னடா மச்சி...குழந்தைங்க ரைடுல நீ போயிட்டு வர்ற"னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க.
தப்பிச்சோம், பொழைச்சோம்னு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தேன். இனிமே சனி, ஞாயிறு சாப்பிட்டு வீட்ல அமைதியா பொழுத கழிக்க வேண்டியதுதான்.
ஆபிஸில் சக ஊழியர், " என்ன சார், எப்படி ஒருந்தது உங்க சிக்ஸ் ப்ளாக்ஸ் ட்ரிப்?" என்று கேட்க சுற்றி முற்றி என் நண்பர்களை தேடினேன். அப்பாடா யாரும் இல்லை."இட் வாஸ்
பென்டாஸ்டிக்...ஐ ரியலி என்ஜாய்டு இட்...கண்டிப்பா இன்னொரு தடவை போகலான்னு இருக்கேன். நீங்க மிஸ் பண்ணாம போயிட்டு வந்துடுங்க" என்று அளந்து விட்டேன்.
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், உங்களுக்காக உயிரக்கூட விடத்தயார்னு யாராவது டயலாக் விட்டா அவங்கள டெஸ்ட் பண்ண சரியான இடம் இந்த "சிக்ஸ் ப்ளாக்ஸ்".
ஆகவே குழந்தைகளே, இன்னைக்கு என்னோட கருத்து இதான்:
சனி, ஞாயிறு லீவு விட்டா அம்மா பொங்கி போடுறத சாப்பிட்டுட்டு அமைதியா வீட்ல இருங்க. அத விட்டு பிரண்ட்ஸ் கூப்பிடறாங்கன்னு சொல்லி என்னை மாதிரி வில்லங்கத்துல
மாட்டிக்காதீங்க.
Posted by மா.கணேஷ் குமார் at 1:10 AM 3 comments