<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-42792606777959657</id><updated>2011-07-30T20:59:54.654-07:00</updated><title type='text'>கருத்து கணேசன்</title><subtitle type='html'>வர வர நம்ம பேச்சையே யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.அதான் இப்படி ஆரம்பிச்சுட்டேன்...'பன்ச்' பாலா,'சிங்கர்' சிவா,'ராம்போ' ராம் இப்படி ரைமிங்கா பேர் வைக்கலாமா? இல்ல 'வெட்டெருவா' வீராசாமி,'ஒத்த கண்' சிங்காரம்,'செயின் ஜெயபால்'...இப்படி மிரட்டலா வைக்கலாமான்னு யோசிச்சப்போ, நம்ம ஒடம்புக்கு ரைமிங்தான் ஒத்து வரும்னு புரிஞ்சுது. அந்த நிமிஷத்திலிருந்து வெறும் கணேசன் 'கருத்து' கணேசனாக அவதரித்தார்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>14</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-3312066937489290510</id><published>2010-09-08T15:58:00.000-07:00</published><updated>2010-09-08T16:11:08.412-07:00</updated><title type='text'>ஒரு பொன் மாலைப் பொழுது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/TIgV9Ba6yPI/AAAAAAAAAYI/9IEFLtMiWoo/s1600/Vaanam-1.jpg"&gt;&lt;img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " src="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/TIgV9Ba6yPI/AAAAAAAAAYI/9IEFLtMiWoo/s400/Vaanam-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5514681881812715762" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடியேன் இந்த பூமியில் அவதரித்து கிட்டதட்ட ஏழு, எட்டு ஆயிரம் நாட்கள் உருண்டோடி விட்டன. அதற்குள் நான் கடந்து வந்த முள்படுக்கைகள் எத்தனை, முரட்டு யுத்தங்கள் எத்தனை. கலைஞர் குரலில் சொல்ல வேண்டுமானால் "தென்றலைத்தீண்டியதில்லை நான், ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்". சரி, சரி "மேல்கட்டை" (பில்ட்-அப் தாம்பா) விட்டு விஷயத்துக்கு வருவோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி இத்தனை "எத்தனைகளை" வாழ்வில் கடந்திருந்தாலும் அடி மனதில் ஒர் ஆசை மட்டும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. அது ஒரு பகல் இரவாகும் அந்த அற்புதமான தினசரி அதிசயத்தை பார்க்காததுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அன்று:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மா, அப்பாவைப் போல் வானம் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட தருணமும் நமக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. சிறுவயது முதல் நான் வசித்து வந்தது ஒரு ஓட்டு  வீடு. பொதுவாக ஓட்டு வீடுகளில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக சிறிய கண்ணாடி பதித்து வைத்திருப்பார்கள். அதன் வழியாகவே இரவு வானத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால், உங்களுக்கெல்லாம் ப்ளாஸ்மா டி.வி. போல் தெரியும் வானம் எனக்கு போர்டபிள் டி.வி. அளவே காட்சி தந்தது. இதைத் தவிர கெப்ளரின் விதிகள், புவி மைய, சூரிய மைய கோட்பாடுகள் என்று பள்ளிக்காலங்களில் அரைத்தூக்கத்தில் கேட்ட விஷயங்கள் "இதுக்கு மேலயும் வானத்தை பாப்பியா, பாப்பியா" என்று கேட்டு வானத்தை நம்பியார், செந்தாமரை லிஸ்டில் சேர்த்து வைத்தன.பிறகு கல்லூரி நாட்களில் பின்பற்றிய முன் தூங்கி பின்னெழும் கொள்கையால் பகல்களுடன் மட்டுமே நாட்களைக் கழிக்க வேண்டியதாகி விட்டது. அது மட்டுமன்றி பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் பழக்கம் வேறு வானத்தை எனக்கு மறக்கடித்து விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்பொரு காலைப்பொழுதில் வேலை தேடி சென்னையில் காலடி வைத்த போது பின்மண்டையில் யாரோ சுளீரென்று அடித்தது போல் இருந்தது. திரும்பி பார்த்தால் நம்ம சூரிய பகவான் "என்னடா மொறைக்கிற" என்று தன் ராகிங்கை ஆரம்பித்தார். ஒரு வேலை மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் ஏ.சி., அபார்ட்மெண்ட்னு ஒளிஞ்சிகிட்டு உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டு வேலையும் தேடியாகி விட்டது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் நான் சந்தித்த அந்தி நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வேலை முடிந்து பஸ்ஸில் ஏறும் நேரங்களில் வானத்தைப் பார்த்தால் "ஹாய் கருத்து, ஹவ் வாஸ் த டே" என்று மிஸ்டர்.நிலா சிரித்துக் கொண்டிருப்பார். மெல்ல மெல்ல மாலைப் பொழுது "வெள்ளை நிறமாய்" இருக்கும் போலும் என்று நினைக்கும் "வெள்ளந்தி" மனிதனாய் மாறிப்போனேன். கடைசியாக நான் குடியிருந்த வேளச்சேரி வீட்டின் மொட்டை மாடியின் புண்ணியத்தில் என் வான எதிர்ப்பு நிலை ஒரு முடிவுக்கு வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேலை முடிந்து வீடு திரும்பியதும் மொட்டை மாடியில் தினமும் அமர்ந்து இரவு வானத்தின் அழகை ரசிக்கத் தொடங்கினேன்.உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில் என் வான ஆராய்ச்சி உச்சியில் இருந்தது. முதலில் பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாட புத்தகத்தை வாங்கி படித்தேன். இரண்டு முறை கோளரங்கத்திற்கு விசிட் அடித்தேன். கரடி வடிவ சப்தரிஷி மற்றும் வேடன் வடிவ ஒரியன் என்று விண்மீன் குழுக்களுடன் உலவத் தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் மட்டும் தமிழக அரசு சூரியக் குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு கொடுத்திருந்தால் அதில் என் பெயரும் இடம் பெற்றிருக்கும். இந்த வான ஆசையானது டீயைக்கூட ஒசியில் குடிக்க நினைக்கும் என்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு அறிவியல் ஸ்டாலில் 700 ரூபாய் கொடுத்து ஒரு தொலை நோக்கி வாங்கும் அளவுக்கு கொண்டு விட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த காலகட்டத்தில்தான் என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு "தம்பி நீ வானத்துல பிடுங்கின ஆணியெல்லாம் போதும், அமெரிக்கா சென்று தங்களின் அரும்பணியைத் தொடரவும்" என்று ஆணை பிறப்பித்து ஒரு வானியல் மேதையின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமெரிக்க மண்ணைத் தொட்டதிலிருந்து ஆர்குட், பேஸ்புக், டாரண்ட், சமையல் என்று என் ஓய்வு நேரத்தில் ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியராய் மாறிப்போனேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இன்று:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறை நண்பர்கள் அனைவரும் விடுமுறைக்காக வெளியே சென்றிருக்க கருத்து கணேசன் மட்டும் அறையில் தனித்து விடப்பட்டேன். மாலை நேரம் தூக்கம் கலைந்து கையில் தேநீருடன் பால்கனி சென்றால் வானம்!!!! அது சின்ன பால்கனி என்பதால் "கொஞ்சம் வானம், நிறைய தேநீர்".&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மையில் பகல் இரவாகும் அந்தக் காட்சி அற்புதமானது. மேகத்துடன் வானம் அழகு என்றால் மேகமற்ற தெளிவான வானமோ மேலும் அழகானது. இரண்டாவது ரகம்தான் நான் இன்று ரசித்தது. என் வீட்டு பால்கனியிலிருந்து பார்க்கையில் வானம் கிட்டதட்ட ஒரு சதுர வடிவ இடைவெளியில் தெரிந்தது. எதிரே வரிசையாக வளர்ந்திருந்த மரங்கள் வானப் புடவையின் பச்சை நிற ஜரிகையாய் ஜொலித்தது. நேரொலெக், ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரங்கள் தோற்கும் அளவுக்கு வானம் இன்று வண்ண வேடிக்கை நடத்திக் கொண்டிருந்தது. நீலம், சிகப்பு, ஆரஞ்சு என்று வர்ண யாகம் நடத்தி கடைசியாய் கருப்பு போர்வையை தன் தூக்கத்திற்கு துணையாய் இழுத்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவரை பச்சை நிற பார்டராய் ஜொலித்த மரங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் கருப்படித்து வானத்துடன் கலக்க ஆரம்பித்தன. தோழமை கொண்ட இரு நெஞ்சங்களில் ஒளிந்திருந்த காதலைப் போல ஒன்றுமற்றிருந்த வானத்தில் நட்சத்திரம் ஒன்று மெல்ல முளைத்தது. ஆகா, நம்மைப் போலவே அதுவும் சோலோ நட்சத்திரம் போல என்று நான் பீலிங்க்ஸ் காட்டிய அந்த நேரத்தில் "எவன்டா அவன் என் ஆள சைட் அடிக்கிறது" என்று இன்னொரு நட்சத்திரம் எட்டிப் பார்த்து முறைத்தது. அந்த இருட்டில் மேலும் பல நட்சத்திர மனிதர்கள் மெல்ல வெளிச்சத்திற்கு வரத்தொடங்கினர். இவ்வாறாக ஒரு இரவு முளைக்கும் அந்த அற்புத தருணத்தை தேநீருடன் பருகி முடித்தேன். இந்த நட்சத்திரங்கள் பல நூறு ஒளி ஆண்டுகள் நம்மை விட்டு தள்ளி உள்ளனவாம். அப்படியாயின் நாம், நம் அப்பா, தாத்தா பிறப்பதற்கு முன் பிறந்த ஒளிக்கற்றையையா நாம் இப்போது பார்க்கிறோம். ஆச்சர்யம்!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே, குழந்தைகளே யாரையும் டம்மி பீஸ் என்று உதாசீனப்படுத்த வேண்டாம். அவர்களும் என் வானத்தைப் போல பல ஆச்சரியங்களை சுமந்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-3312066937489290510?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/3312066937489290510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=3312066937489290510' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/3312066937489290510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/3312066937489290510'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2010/09/blog-post.html' title='ஒரு பொன் மாலைப் பொழுது'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/TIgV9Ba6yPI/AAAAAAAAAYI/9IEFLtMiWoo/s72-c/Vaanam-1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-2482895056099317605</id><published>2008-07-06T09:12:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:19.554-08:00</updated><title type='text'>இந்திய வரலாறு, மிக எளிமையாய்...</title><content type='html'>சமீபத்தில் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்(அட, நம்ம விகடன் 'மதன்' தாங்க) எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகம் படித்தேன். படிக்க படிக்க, இந்திய வரலாறை &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு எளிதாகவும், பக்கத்துக்கு பக்கம் ஆர்வம் தூண்டும் வகையிலும் எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். தைமூரில் ஆரம்பித்து கடைசி முகலாய அரசர் பகதூர் ஷா வரையிலும் நம்மை புத்தகம் கட்டி வைத்து விடுகிறது, இது மதன் அவர்களின் எழுத்துத் திறனுக்கு நல்ல சான்று.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/SHDwxOqskzI/AAAAAAAAAFg/E2c6FVibdjM/s1600-h/madhan1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/SHDwxOqskzI/AAAAAAAAAFg/E2c6FVibdjM/s200/madhan1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5219936696663839538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கஜினி,குதுப்மினார்,கோஹினூர்,தாஜ்மஹால்,பாபர்,அக்பர் என்று நாம் கேள்விப்பட்ட பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்படாத பல விஷயங்களை நன்றாக விளக்கியிருக்கிறார். அவற்றுள் என்னைக்கவர்ந்த இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது விஷயமும் ஒரு முதலாவதைப் பற்றியதே. தெளிவாகச் சொன்னால், டெல்லி அரியணையை அலங்கரித்த முதலாவது பெண் சுல்தான் ரஸியா பேகம்தான் அது. இவர் குதுப்மினார் கட்டி முடித்த 'இல்துமிஷ்'ன் மகள். அறிவு, வீரம், அரசியல் திறம், நிர்வாகத்திறமை என்று நாடாளும் மன்னனுக்கு உரிய சகலமும் பெற்றிருந்த இந்த பெண் புலிக்கு முதலில் நாடாளும் உரிமை மறுக்கப்பட்டது. ஏன் தெரியுமா? அது 'பெண்' புலி...அதுதான். இன்றும் பெண்களுக்கு முகத்திரை அணிவிக்கச் சொல்லும் பழக்கம் உள்ள ஒரு சமுதாயத்தில் பிறந்த ரஸியாவுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கும். அவர் டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தது மொத்தம் மூன்றே ஆண்டுகள்தான். பின்னர் ஒரு போரின் போது சில இந்து வீரர்களால் கூடாரத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஸியாவைப் பற்றிய இந்த நல்ல விஷயங்களை சொன்னது போலவே அவரின் குறைகளையும் மதன் பாரபட்சமின்றி சொல்லியிருக்கிறார். உதாரணம், அடிமை யாகூப் மீது அரசி கொண்ட நட்பு.கி.பி.1236-ல் ஆட்சிக்கு வந்த ரஸியா பேகத்திற்கு பிறகு வேறு பெண் சுல்தான்களை காலம் அரியணைக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவரே கடைசி பெண் சுல்தானாகவும் அறியப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இரண்டாவது விஷயத்திற்கு செல்வோம். பள்ளிப்பாடங்களில் பாபர் மற்றும் அக்பருக்கு இடையில் 'ஷெர்ஷா' என்னும் ஆப்கானிய மன்னர் ஆண்டதாக அறிந்திருந்தேன். அவரைப் பற்றி மதன் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே அந்த மன்னர் மீது சற்று மரியாதை ஏற்பத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் - மொகலாய சாம்ராஜ்யம் நிறுவியவர்; அக்பர் - அதை இன்னும் பெரிதாக்கி, நல்ல நிர்வாகம் அளித்தவர். அந்த பாபரின் மகனும் மற்றும் அக்பரின் தந்தையுமான ஹீமாயூனை &lt;br /&gt;தோற்கடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியவரே இந்த 'ஷெர்ஷா'. இவர் ஆரம்பித்து வைத்த பல நல்ல விஷயங்களை தொடர்ந்ததால்தான் அக்பரின் ஆட்சி முறை சிறந்து விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;1. மத்திய அரசு, மாநில கவர்னர்கள், பெரிய அதிகாரி வர்க்கம் - போன்றவற்றை ஆரம்பித்தவர் ஷெர்ஷாதான்.(இவை அக்பர் அல்லது ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு என்று இதுநாள் வரை நான் நம்பியிருந்தேன்).&lt;br /&gt;2. இவரது சாம்ராஜ்யம் 'சர்க்கார்கள்' மற்றும் 'மாவட்டங்கள்' என்று பல பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கை குறைக்க அடிக்கடி அவர்களை இட மாற்றங்கள் செய்தார்.&lt;br /&gt;3. நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். விளைச்சல் இல்லாக் காலங்களில் விவசாயக் கடன்களைத்(ப.சி-யின் முன்னோடியோ!!!) தள்ளுபடி செய்தார். &lt;br /&gt;4. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது. தண்டனைகள மிகக் கடுமையாக்கப்பட்டன.&lt;br /&gt;5. முக்கியமாக 'இந்து - முஸ்லிம்' பார பட்சம் பாராமல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆட்சிக்கு வந்து இன்று ஒன்றும் செய்யாமல் 'கஜானாவை' மட்டும் காலியாக்கும் சில அரசியல்வாதிகளை பார்க்கையில் 'ஷெர்ஷா'-வை படித்து நாம் பெருமூச்சே விட முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இன்னும் பல சுவையான விஷயங்களை கொஞ்சமும் சுவை குன்றாமல் சொன்னதற்காக 'மதன்' அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னொரு ஆச்சரியம், இந்த புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தது மதன் என்றால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள், காரணம் ஓவியம் வரைந்தது 'அரஸ்'. மிக நன்றாக வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..விலை : 110 ரூபாய்கள், விகடன் பிரசுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவதற்கு முன் இரு பொது அறிவு கேள்விகள்(தூர்தர்ஷன் அறிவோம் அறிவை நிகழ்ச்சியில் கேட்கப்பட்டவை) :&lt;br /&gt;&lt;br /&gt;1. பிறகோள்களில் இருக்கும் உயிரினம் பற்றி படிக்கும் துறையின் பெயர் என்ன?&lt;br /&gt;2. DEIMOS, PHOBOS - அப்படி என்றால் என்ன? விடை தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள். அவை பற்றி மேலும் உங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் பகீர்ந்தீர்களாயின் அடியேன் &lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை போக்கிக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-2482895056099317605?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/2482895056099317605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=2482895056099317605' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/2482895056099317605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/2482895056099317605'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2008/07/blog-post.html' title='இந்திய வரலாறு, மிக எளிமையாய்...'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/SHDwxOqskzI/AAAAAAAAAFg/E2c6FVibdjM/s72-c/madhan1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-4792527711888043906</id><published>2008-03-21T18:52:00.001-07:00</published><updated>2008-03-28T16:09:14.514-07:00</updated><title type='text'>செல்வி ஓடிப் போகிறாள்....</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;1 . அவன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஜன்னலை சாத்துவது போன்ற உணர்வு அவருக்கு தெரிந்தது. கண் விழித்துப் பார்த்தார். தூக்கத்தில் கனவு கண்டதுபோல் உணர்ந்தார். இருந்தும் உறுதிப்படுத்திக் கொள்ள, எழுந்து கண்ணாடியை அணிந்தார். இரவு விளக்கின் வெளிச்சத்தில் மனைவி அயர்ந்து தூங்குவது தெரிந்தது. மெல்ல எழுந்து நடு அறைக்கு வந்து விளக்கை போட்டார். மகளின் அறை திறந்திருப்பது தெரிந்து உள்ளே சென்றார். ஜன்னல் சாத்தப்பட்டிருந்தது. மேஜை இருந்த இடத்திலேயே இருந்தது. அதன் மேலே மேஜை விளக்கும் இருந்தது. ஆனால் மகள் மட்டும் இல்லை!!! அதற்கு பதில் அந்தக் கடிதம் மட்டும் மேஜை மேல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தை பிரித்துப்படிக்க ஆரம்பித்ததும், கண்கள் குளமாக ஆரம்பித்தது. அன்புள்ள என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த கடிதத்தின் வரிகள் இவ்வாறு படர்ந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"...........நான் யாருடன் வாழ்வதற்காக செல்கிறேன் என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. அவரை உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால்  திருமணம் என்பது நீங்கள், நான் மற்றும் அவர் மட்டும் சேர்ந்து நடத்துவது அல்ல. உற்றார், உறவினர், சொந்தம் என்று எங்கிருந்தோ வந்த இவர்கள்தான் அதை தீர்மானிக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி என்ற ஒன்றை சொல்லி இவர்கள் முன் அவர் அவமானப்படுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருடைய அப்பாவும் எங்கள் திருமணத்தை ஆதரிக்காததால்தான் இறுதியில் இந்த முடிவுக்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திருமணத்தின் காயம் காலப்போக்கில் ஆறும். அன்று உங்கள் மடியில் புதைந்து அழுது மன்னிப்பு தேடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-இப்படிக்கு&lt;br /&gt;உங்கள் அன்பு மகள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தை படித்து விட்டு கண்களை தோளிலிருந்த துண்டினால் ஒற்றிக் கொண்டார். கிரில் கதவைத் திறந்து மகள் வெளியேறி நடந்து கொண்டிருந்ததை ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தை மடித்து தனக்கு பிடித்த மகாகவி கவிதைத் தொகுப்பு புத்தகத்தின் இடையில் வைத்து மூடினார். மேஜை விளக்கை அணைக்க மறந்திருந்தார். அந்த வெளிச்சத்தில் புத்தகம் ஒரு கடிதத்தை படித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;2 . அவள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாலைவனத்தில் தூரத்தில் காத்திருக்கும் ஒரு உருவத்தை நோக்கி அவள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஓட்டம் கடுமையாக இருந்தது. திடீரென்று வெயிலின் உக்கிரத்தில் அவள் மயங்கி விழுந்தாள். சட்டென கண் விழித்தாள். மின் விசிறி அதன் உச்சத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அருகில் அன்புக் கணவர் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நொடியே அவளுக்கு புரிந்தது, பாலைவனம் கனவில்தான் வந்ததென்று. ஆனால் தாகம் மட்டும் உண்மையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறைக்கு சென்று தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பக்கத்து அறையை எதேச்சையாகப் பார்த்தாள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இந்த வீடிலிருப்பவர்கள் சோம்பேறித்தனத்தில் E.B.-க்காரன் வாழ்கிறான் என்று சொல்லிக் கொண்டு விளக்கை அணைக்கச் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் இடையில் அந்தக் கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது. காலியாய் இருக்கும் படுக்கை, பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடிதம் - அவளால் யூகிக்க முதிந்தது. பிரித்துப்படித்தாள். அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது. முந்தானையில் வாயை மூடி முடிந்த மட்டும் அழுதாள். கடிதத்தை  மடித்து வைத்துவிட்டு, கண்களைத் துடைத்தாள். கடிகாரத்தையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணி பதினொண்ணரையைக் காட்டியது. அவளுக்கு மயங்கி விழத்தோன்றியது. சற்றே தன்னைத் தேற்றிக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;3. அவர்கள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ரயில் நிலையத்தில் அவன் மட்டும் தனித்திருந்தான். எப்பொழுதும் அந்த நேரத்தில் இறங்கி செல்லும் பயணிகளையே பார்த்திருந்த அந்த ரயில் நிலையம் அப்பொழுதுதான் ரயில் ஏறக் காத்திருக்கும் ஒருவனைப் பார்த்திருந்தது.&lt;br /&gt;"சரியா 11:30 மணிக்கு ட்ரெயின். நீ மட்டும் வரலை, அப்புறம் நான் உன் கிளாஸ்மேட் ரெட்டை ஜடை கனகா அவளோட புருஷன். எங்கப்பா ஒத்த கால்ல நிக்கிறாரு, அவளை கட்டிக்கச் சொல்லி. மறந்துடாத. அப்புறம் என்ன சொல்லி குத்தமில்லை" - சற்று அதிகமாகவே மிரட்டியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் அவள் 11:20 ஆகியும் வராதது சற்று பயத்தை ஏற்படுத்தியது. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவள் வரவில்லை என்றால் அவன் காதல், காதலி என எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா, தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. அதள பாதாளத்தில் விழ இருந்த காதலை 11:25-க்கு வந்து காப்பாற்றி விட்டாள். இப்பொழுது பயம் விலக குற்ற உணர்ச்சி எட்டிப்பார்த்தது. அம்மா எப்படியெல்லாம் அழுவாளோ, நினைத்தாலே பாவமாய் இருந்தது. அந்தக் கடிதம் நிச்சயம் அவன் நிலைமையை அவளுக்கு புரிய வைத்திருக்கும். அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாய் கடிதம் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாய் பதினொண்ணரைக்கு ரயில் வந்தது. இருவரும் கைகோர்த்தபடி ஏறி அமர்ந்தனர். காதலர்களை சுமந்த புது உற்சாகத்தில் ரயில் புது வேகம் எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;4. மீண்டும் அவள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அவள் மெல்ல எழுந்து பார்த்தாள். எல்லாரும் உறங்கி கொண்டிருந்தார்கள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து மேஜையில் வைத்து விட்டு, உடைகளை மெல்ல எடுத்து பெட்டிக்குள் வைத்தாள். நினைவுக்கு வந்த மேலும் சில அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்து வைத்தாள். பெட்டியை எடுத்து வைத்துவிட்டு மணியைப் பார்த்தாள். 11:10 ஆகியிருந்தது. இன்னும் இருபது நிமிடங்களில் ரயில் வந்து விடும். அவனோடு வாழப்போகும் புதுவாழ்வை நினைக்க மகிழ்ச்சியாய் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;11:15-க்கு பெட்டியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். பெரிய மீசையுடன், கையில் அவள் எழுதிய கடிதத்துடன் அவள் தந்தை நின்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சீ..நாயே, குடும்ப மானத்த வாங்க கெளம்பிட்டியா" என்று வேகமாய் ஒரு அறை விட்டார். கதவின் விளிம்பில் பட்டு நெற்றியில் ரத்தம் சொட்ட அவள் விழுந்தாள். மேலும் சில அறைகள் விழுந்தது. விளக்கு போடப்பட்டு வீட்டில் இருந்த அனைவரும் எழுந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அழுது தீர்த்தாள். வீடே அல்லோகல்லோலப்பட்டிருந்தது. ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஒரு ஓரமாய் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். மணி 11:45-ஐ தாண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;5. மீண்டும் அவன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு அவசர அவசரமாக அவன் ஓடி வந்தான். ரயில் நிலையத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மணி பார்த்தான். இன்னும் அரைமணி நேரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணிகள் காத்திருக்க போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தான். பதட்டத்தைக் குறைக்க பையில் வைத்திருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா...சூரிய சந்திரரோ" - சட்டென்று கண்முன் அவள்தான் ஞாபகத்துக்கு வந்தாள். இதே கவிதையை எத்தனை முறை அவளைப் பார்த்து கூறியிருப்பான். எல்லா சமயங்களிலும் அவளிடமிருந்து ஒரே பதில்தான் வரும். "உங்களுக்கு வேற வேலையே இல்ல, போங்க". சிரித்த படியே புத்தகத்தை மூடிவிட்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 11:25-ஐத் தொட்டிருந்தது. இன்னும் அவளைக் காணவில்லை. பயத்துடன் சற்றே அழுகையும் சேர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடம் தாமதமாய் ரயில் வந்தது. ஆனால் அவள் வரவில்லை. கண்களைத் துடைத்த படியே எழுந்தான். ரயில் பெட்டிக்குள் தனியாய் அமர்ந்தான். தலையை எட்டிப்பார்த்து தூரத்தில் அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதுவும் தெரியாத ரயில் வழக்கம் போல் தன் பயணத்தை தொடங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-4792527711888043906?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/4792527711888043906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=4792527711888043906' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/4792527711888043906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/4792527711888043906'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2008/03/blog-post.html' title='செல்வி ஓடிப் போகிறாள்....'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-5995482738581336688</id><published>2008-01-11T19:39:00.000-08:00</published><updated>2008-12-11T12:37:19.825-08:00</updated><title type='text'>அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4g3KOy4RMI/AAAAAAAAAEw/2ggcbMHAtSo/s1600-h/globe_east.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4g3KOy4RMI/AAAAAAAAAEw/2ggcbMHAtSo/s200/globe_east.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5154430422435251394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது கருத்து கணேசன் பள்ளிப் பருவத்து நிகழ்ச்சி. எங்கள் வரலாற்று ஆசிரியர் பல்வேறு தலைவர்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் வேலையைக் காட்ட தலைவர்களின் புண்ணியத்தில் தாலாட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். சந்திர குப்த மௌரிய காலத்தில் ஆரம்பித்து பசுமைப்புரட்சி சி.எஸ் வரைக்கும் வந்திருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பாடத்தை நிறுத்தி விட்டு எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லோரும் உலகத்தைப் பார்த்து அதன் வழியில் ஓடிக்கொண்டிருக்க இவர்கள்தான் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்கள், அதனால்தான் அவர்களை தலைவர்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு செயலை உங்களை செய்ய சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலில் ஆரம்பித்து சட்டம் ஒழுங்கு கட்டிக்காப்பது வரை ஆளாளுக்கு ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர். எந்த பதிலிலும் வரலாற்று ஆசிரியர்க்கு திருப்தி இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்" - என்பது போல பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சோவை (ஹி,ஹி வ.ஆ நமக்கு ஆசையா வச்ச செல்லப் பேரு) நீ எல்லாரும் திரும்பி பார்க்கிற மாதிரி என்ன பண்ணுவ?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த யோசனையோடு எழுந்தேன்...'ம்..ம்' தொண்டையை செருமியதும் 'புகழேந்தி கேள்விக்கு அரங்கனார் சொல்லப்போற பதில்' மாதிரி மொத்த வகுப்பும் அமைதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், பெயர் மாற்றம் செய்வேன் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ஆசிரியரின் முகத்தில் டன் கணக்கில் ஆச்சரியம். அடடா, ரொம்ப புதுசா பையன் ஏதோ சட்டம் கொண்டு வரப்போகிறான் என்பது போல பார்த்துக் கொண்டே, &lt;br /&gt;&lt;br /&gt;"புரியலப்பா..கொஞ்சம் விளக்கமா சொல்லு" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம ப்யூன் மாணிக்கம், நீங்க,  நம்ம ஹெட்மாஸ்டர் ஏன் நம்ம முதலமைச்சர், பிரதம மந்திரி உட்பட எல்லார் பேரையும் ஜேம்ஸ்னு மாத்தி வைக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவேன் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"கொண்டு வந்து"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம மணிக்கூண்டு மேல ஏறி நின்னுட்டு நல்லா சத்தமா "ஜேம்ஸ்"-னு கூப்பிடுவேன் சார். அப்ப கட்டாயம் இந்த உலகமே திரும்பி என்னை பார்க்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ அன்பாக சொல்லி என்னை திட்டினார். அது நமக்கு இங்கே தேவையில்லாதது. எனக்கு தெரிந்து அதன் பிறகு அவர் வகுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதாய் நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, குழந்தைகளே இனிமே உலகத்தை திருப்புறதுக்கு ஸ்க்ரூ ட்ரைவர் தேடுற வேலைய விட்டுட்டு ஒழுங்கா படிச்சு முன்னேறுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-5995482738581336688?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/5995482738581336688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=5995482738581336688' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5995482738581336688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5995482738581336688'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2008/01/blog-post_11.html' title='அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே!!!'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4g3KOy4RMI/AAAAAAAAAEw/2ggcbMHAtSo/s72-c/globe_east.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-6096815754351912359</id><published>2008-01-06T15:09:00.001-08:00</published><updated>2008-12-11T12:37:20.075-08:00</updated><title type='text'>குணசேகரன் கோழையல்ல - சிறுகதை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4FgC-y4RLI/AAAAAAAAAEo/3DjL_qnzuNs/s1600-h/shiv4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4FgC-y4RLI/AAAAAAAAAEo/3DjL_qnzuNs/s400/shiv4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5152505053020964018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனதிற்குள் பெரிய சவாலுடனும், மடி நிறைய பயத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்கினான் குணசேகரன். இறக்கி விட்ட பேருந்தை புகையினூடே மறைவதைப் பார்த்துக் கோண்டே அடுத்த பேருந்தை பிடித்து வந்த வழியே போய் விடலாமா என்று யோசித்தான். பிறகு "கோழை குணசேகரன்" என்று சிறுவயது முதல் பரிகாசம் செய்யும் நண்பர்களின் கேலிப்பேச்சு உண்மையாகவே போய்விடும். "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா" - சரேலென திரும்பினான். "ச்ச, ஒரு டீக்கடையில் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அட்வைஸ் சொல்லுமளவுக்கு நம்ம நிலைமை ஆகிப்போச்சே... ம்ம்..பார்ப்போம் என்னதான் ஆகுதுன்னு" - முடிவு செய்து கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் தூங்கி விட்டு விழித்தபோது, சூடான காபியும், அன்றைய தினசரி ஒன்றும் அவனது தலையணை அருகே அலங்கரித்துக் கொண்டிருந்தன. முன்னது தாயின் பாசம், பின்னது தந்தையின் கவனிப்பு. காபியை சுவைத்து கொண்டே தினசரியில் கண்களை மேய விட்டுக் கொண்டிருந்தான் குணசேகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இமாசல பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தலில் எட்டாம் முறையாக கள்ள ஓட்டு போட முயன்றவன் கைது" - செய்தியை பார்த்தவுடன் சட்டென புரை ஏறியது. தலையைத் தட்டிக் கொண்டே தினசரியை கீழே வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மாப்ள, என்ன நல்ல தூக்கமா? உங்க அம்மா சொன்னாங்க காலைலதான் வந்தீயாமே? வழியில ஏதும் பிரச்சினையா?" - இந்த வசனம் உதிர்த்த உதடுகளுக்கு சொந்தக்காரன் ஆறுமுகம், குணசேகரனின் நண்பன். அவனிடம் மட்டும்தான் குணசேகரன் "அந்த" விஷயத்தைப் பற்றி பேசியிருந்தான். வேறு யாருக்கும் தெரியாது, தெரிந்து விடவும் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;"குணா, இன்னொரு மேட்டர் தெரியுமா? புதுசா வந்திருக்கிற எஸ்.பி பயங்கர ஸ்டிரிக்டாம். எலக்ஷன் பூத்ல வச்சு என்ன பிரச்சினை பண்ணாலும் எதையும் விசாரிக்காமலே அரஸ்ட் பண்ண சொல்லிட்டாராம். போன தடவை நாலு முறை கள்ள ஓட்டு போட்ட நம்ம முத்துவேலன் இந்த தடவை பூத் பக்கமே போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். பாத்துக்கப்பு, நீயெல்லாம் எம்மாத்திரம். நல்லா யோசிச்சுதான் இந்த தடவை வந்திருக்கியா? இப்ப கிடைக்கிற மரியாதை அப்புறம் கிடைக்காதுப்பா. பாத்து நடந்துக்க" சொல்லிவிட்டு அம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே குணசேகரன் மனதிற்குள் நாலைந்து பயக்கன்றுகளை நட்டு வைத்து நீர் ஊற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகம் போன சிறிது நேரத்திற்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான் குணா. ஆறுமுகம் சொன்னதைபோல அவனுக்கு "மரியாதை" கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானம், மெய்யப்பன் - இவர்கள் இருவர்தான் அந்த ஊரின் முக்கிய அரசியல் புள்ளிகள். தேர்தல் களத்தில் முதல் இரண்டு இடங்களை இவர்கள் இருவர்தான் எப்போதும் அலங்கரித்தார்கள். வேறு வேறு கட்சி மற்றும் ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த முறை மெய்யப்பன் தோல்வி என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லிவிடலாம் வெற்றி சந்தானத்தின் பக்கம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;குணசேகரனின் பெரிய அண்ணன் சந்தானத்தின் கட்சியை சேர்ந்தவன். அடுத்த அண்ணன் மெய்யப்பன் பக்கம். தேர்தல் சமயங்களில் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சுத்தமாக இருக்காது. இது ஒரு வகையில் குணசேகரனுக்கு சாதகமாக இருந்தது. அவன் ஓட்டுப்போட்டு விட்டு வரும்போது சந்தானத்தின் ஆட்களைப் பார்த்தால் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்று சொல்லிவிடுவான். மெய்யப்பன் ஆட்களிடம் அவனுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என்று மையைக்காட்டி நழுவி விடுவான். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் நண்பர்களை சேர்த்திருந்தான். இதைத்தான் அறுமுகம் "மரியாதை" என்று குறிப்பிட்டான். போர்வையுடன், புதுசா வந்திருக்கிற எஸ்.பி பற்றிய பயத்தையும் உதறி விட்டு எழுந்தான் குணா.&lt;br /&gt;&lt;br /&gt;"குணா, போய்ட்டு சீக்கிரம் வரப்பாரு. பசங்ககிட்ட பேச்சு கொடுத்திட்டு நிக்காத. நம்ம பரஞ்சோதி மவன் கள்ள ஓட்டு போட்டான்னு சொல்லி போலிசு புடிச்சுட்டு போச்சாம். பயலுக அந்த டீக்கடை பக்கம் நின்னு பெரியவன் கிட்ட சொல்லிட்டு இருந்தானுவ. நீ சிவனேன்னு ஓட்டு போட்டுட்டு வர வழிய பாரு" - இவ்வாறு சொல்லிக்கொண்டே நம்ம கதைக்குள் எண்ட்ரி கொடுத்தார் குணா அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிப்பா" என்று தலையாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் 2 மணி இருக்கும். பசங்க எல்லாம் சாப்பிட போயிருப்பாங்க. இப்ப போனாத்தான் சரியாய் இருக்கும். யார்கிட்டயும் பேச்சு குடுக்க வேண்டி இருக்காது. யோசித்தவாறே சட்டையை மாட்டிக் கொண்டு எலக்ஷன் பூத்துக்கு நடையைக் கட்டினான்.&lt;br /&gt;அப்பாடா, ரெண்டுபேருதான் நிக்கிறாங்க. குணாவுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் தைரியம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. உள்ளே வோட்டர்ஸ் லிஸ்ட் சரி பார்க்கும் பணியில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடுத்தது யாருப்பா". மனசு படபடவென அடித்து கொண்டது. உள்ளங்கை வேர்த்ததை குணாவால் உணர முடிந்தது. உள்ளே மெல்ல சென்றான். குணா கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு "அடையாள அட்டை இருக்கா?" என்று கேட்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;"இதோ இருக்கு சார்" வாங்கி சரி பார்த்தார். குணசேகரன் படபடப்பின் உச்சத்தில் இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"சரியாய் இருக்கு. அங்க போ" - என்று அடுத்த ஆளிடம் கை காண்பித்தார். அவரும் ஏதோ லிஸ்டில் டிக் செய்து கொண்டு, அங்க மிஷின் இருக்கு என்று கைகாண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 2:20 -ஐத் தொடப்பார்த்தது. குணாவின் கையில் மை வைக்கப்பட்டு கொண்டிருந்தது. மை வைத்தவன் அவனை ஒரு மாதிரி பார்த்தது, குணாவுக்கு என்னவோ போலிருந்தது. "இவன் ஒரு வேளை எல்லாரிடமும் சொல்லிவிடுவானோ" என்று பதைபதைத்தான். பூத்தில் இருந்தவரும் அவனை வித்தியாசமாக பார்த்துக்கொண்டே அடுத்த ஆளை உள்ளே கூப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மச்சான் இப்படி வேர்த்து போய் வர்ற. உள்ள ஏதும் இன்டர்வியூ நடத்துனாங்களா?" - பூத்துக்கு வெளியே தங்கவேலு குணாவை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா..உள்ள ஃபேன் ஓடல" - சொல்லியவாறே நழுவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள் வந்து சட்டையை கழற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்த போதுதான் குணாவுக்கு மூச்சே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன, என்ன சார்? சந்தானம், மெய்யப்பன் ரெண்டு பேருமே பெருச்சாளிங்கதான். இதுல எவனுமே வேணான்னு ஊர் பேர் தெரியாத ஒரு சுயேச்சைக்கு வாக்களித்து தன் வாக்கை வீணாக்க விரும்பவில்லை குணா. அதான், இந்த முறை துணிந்து தனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று "நாற்பத்தி ஒன்பது ஓ" தேர்தல் சட்ட விதியின்படி 17-A ஃபார்ம் வாங்கி பூர்த்தி செய்திருந்தான். சந்தானத்தை விட்டா மெய்யப்பன், மெய்யப்பனை விட்டா சந்தானம் என்று மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டு தைரியமாய் எல்லோரும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்க பயந்தவாறே நாற்காலிக்குள் பதுங்கியிருக்கும் இந்த குணசேகரன் கோழையா? நீங்களே சொல்லுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லைங்க. நாம ஒரு இடத்துல பொண்ணோ, மாப்ளயோ பார்க்க போறோம், நமக்கு பிடிக்கலைன்னு வைங்க. உடனே எல்லார் முன்னிலையிலும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? போய் லெட்டர் போடுறோம் என்று சொல்லி விட்டு அல்லவா வருகிறோம். அப்படியிருக்க, நம்ம அரசியல் சட்டம் மட்டும் எப்படி எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை, 17-A ஃபார்ம் கொடுங்கன்னு தைரியமா பூத்ல எல்லார் முன்னாடியும் ஒரு குடிமகன் சொல்வாருன்னு எதிர்பார்க்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் போட்டியிட கல்வி அவசியம் இல்லை, அப்படி வைச்சா ஒரு காமராஜர் மாதிரி தலைவரை இழந்து விடுவோம் அல்லவா? சரி நியாயமான வாதம்தான். ஆனால் ஓட்டுபோடுபவன் மட்டும் 17-A வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கும் அளவுக்காவது படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். பல்பு, கிரிகெட் மட்டை, கத்தரிக்கோல் சின்னங்கள் மாதிரி "யாரும் பிடிக்கவில்லை" என்று ஒரு சாய்ஸ் கொடுத்தால் என்னவாகப் போகிறது? அதை விட்டு ஃபார்ம் வாங்கி, அதில் எனக்கு யாரையும் பிடிக்கவில்லையென்றும், அதற்கான காரணத்தையும் விலாவரியாக மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காத Mr.குடிமகன் எழுதிக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம் என எனக்கு புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன குழந்தைகளே, இன்னும் இந்த நாற்பத்தி ஒன்பது ஓ பற்றி எதுவும் தெரியலன்னா கீழே இருக்குற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/49-O&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-6096815754351912359?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/6096815754351912359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=6096815754351912359' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/6096815754351912359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/6096815754351912359'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2008/01/blog-post.html' title='குணசேகரன் கோழையல்ல - சிறுகதை'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R4FgC-y4RLI/AAAAAAAAAEo/3DjL_qnzuNs/s72-c/shiv4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-576789390834063523</id><published>2007-12-03T18:53:00.001-08:00</published><updated>2008-12-11T12:37:20.258-08:00</updated><title type='text'>நீங்கள் பழைய ஜோவா? புதிய ஜோவா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R1TJAdOxp-I/AAAAAAAAAEg/EYwn6WaOexQ/s1600-R/Gandhi1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R1TJAdOxp-I/AAAAAAAAAEg/GB56k7ukEME/s320/Gandhi1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5139954084420364258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் அசத்தலா ஆரம்பிச்சு படு மொக்கையா முடிஞ்சு போன "அவல் கேசரி"-யப் பார்த்தோம். இந்த வாரம் 'மொக்கை'-யா ஆரம்பிச்சு ரொம்ப நல்லா முடிஞ்ச ஒரு மேட்டரை எழுதப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி பகரும் நன்னாள்"(thanks giving day) - என்று சொல்லி நாலு நாள் லீவு விட்டாங்க. பெசன்ட் நகர் பீச், உதயம் தியேட்டர், தி-நகர் கூட்டம், எனக்கு சென்னையை சுத்தி சுத்தி காட்டின 5E,D70 இது எதுவுமே இல்லாம நாலு நாள் "டைம் பாஸ்" பண்ணுடான்னா நான் என்ன பண்ணுவேன், சொல்லுங்க? ஏற்கனவே "சிக்ஸ் பிளாக்ஸ்"-ல கிடைச்ச ஒரு நல்ல அனுபவமே போதும். வெளியில போலான்னு எவன்கிட்டயும் பேச்சே எடுக்கல. இங்க இருக்கிற ஒன்னு, ரெண்டு தெரிஞ்ச தெரியாத நபர்களுக்கெல்லாம் போன், சாட் - என்று முடிந்த வழிகளில் எல்லாம் மொக்க போட்டு முதல் நாளை தீர்த்தேன். இதுக்கு மேல பேசுனா நட்பு முறிஞ்சுடும். சரி, பொழச்சி போங்கடான்னு டி.வி-யை போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ படுமொக்கையாய் ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. "Joe Somebody"-என்ற அந்தப் படத்தை முற்றிலும் விருப்பமே இல்லாமல் நான் போட்ட காபியை நானே குடிப்பது போல் பார்க்க ஆரம்பித்தேன். படம் ஒண்ணும் சொல்லிக்குற மாதிரி "டாப்" கியரில போற படம் எல்லாம் கிடையாதுங்க. ரொம்ப சாதாரண படம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோ - ஒரு அலுவலகத்தில் பல வருடங்களாய் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ஆசாமி. அலுவலத்தில் பதவி உயர்வு இல்லை; வீட்டில் நிம்மதி இல்லை(டைவர்ஸ் கேஸ்)...வாழ்க்கையை ஒரு வழியா ஓட்டிட்டு இருக்குற ஒரு சாதாரண  ஜீவன். ஒரு நாள் அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவை ஒட்டி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை அழைத்து செல்கிறார். "parking lot"-ல் ஒரு சின்ன பிரச்சினை ஆகி விடுகிறது. தன்னையொத்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில், ஜோவுக்கு இடம் கொடுக்காமல் வேறு ஒரு ஆள் குறுக்கே வந்து தன் காரை நிறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காரிலிருந்து இறங்கி அந்த நபரை பார்த்து "நீ செய்தது தவறு, வண்டியை நகர்த்து" என்கிறார். ஆனால் அந்த ஆள் "மல மாடு" மாதிரி ஆஜானுபாகா இருக்கிறான். நம்மாள் அவன் முன்னாடி சுண்டெலி மாதிரி நிக்கிறார். டேய், ஒழுங்கா வாய மூடிட்டு போன்னு சொல்லிட்டு அவரை அடித்து விடுகிறான். கன்னத்தை துடைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்( நம்ம ஊர் மாதிரியே). இவை எல்லாவற்றையும் விட தன் சிறு வயது மகள் முன் ஏற்பட்ட அவமானம் வேறு. காரை அமைதியாக வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் கழித்து அவர் செய்யும் அந்த அசாதாரணமான காரியம் எல்லோரையும் வியக்க வைக்கிறது. தன்னை அடித்த அந்த ஆளுக்கு போன் போட்டு இன்னும் ரெண்டு வாரத்துல அதே இடத்துல சண்டை போடலாம் வான்னு சவால் விடறார். சும்மா பேச்சுக்கு சொல்றார்னு பார்த்தா, அண்ணன் சீரியஸாவே களத்தில் இறங்கி விடுகிறார். தற்காப்புக்கலை சொல்லித்தரும் ஒரு நபரை அணுகி பயிற்சி எடுக்கிறார். முதலில் அவர் கொடுக்கும் அடிகளை விட வாங்கும் அடிகள் தான் அதிகம். கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பின் கலக்குகிறார், அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'விஜய்', 'அஜீத்' , 'விக்ரம்' மாதிரி கதாநாயகன் ஒரு நாற்காலியை போட்டு நச்சுன்னு எழுந்து உட்கார ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் அலுவலகத்தில் அவர் புகழ் பரவுகிறது. எல்லோரும் அவரை ஒரு "ஹீரோ" மாதிரி உசுப்பேத்துகிறார்கள். நிர்வாகம் அவருக்கு பதவி உயர்வு தருகிறது.  ஆனால் ஜோவுடைய மகளுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. அவர் பழைய ஜோவாக மாற வேண்டும் என்கிறாள். ஆனால் ஜோ விடாப்பிடியாக சண்டைக்கு ரெடியாகி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த நாளும் வருகிறது. இருவரும் பழைய இடத்தில் மோதிக்கொள்ள தயாராகிறார்கள். சுற்றிலும் அலுவலக நண்பர்கள் நின்று ஜோவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். ஜோவுக்கு சண்டை கற்றுக் கொடுத்த நபரும் அந்த கூட்டத்தில் நிற்கிறார். அவருக்கு ஜோவின் மீது மிகுந்த நம்பிக்கையிருந்தது. அவர் கண்டிப்பாக ஜெயித்து விடுவார். ஏனெனில் அந்த அளவுக்கு பயிற்சி எடுத்திருந்தார். அந்த ஆஜானுபாகான ஆள் கண்களில் பயம் தெரிகிறது. கைகளில் நடுக்கம். ஆனாலும் விட்டு கொடுக்காமல் "வா! மோதலாம்" என்கிறார். ஜோ ஒரு நிமிடம் அவனை உற்று நோக்குகிறார்; அவன் கண்களில் பயத்தை படிக்கிறார். கண்டிப்பாக இந்த போட்டியில் வென்று விடுவோம் என்று அவருக்கு தெரிகிறது. சட்டென்று முடிவுக்கு வருகிறார். "நாம் மோதப் போவதில்லை" என்று கூறிவிட்டு திரும்பி நடக்கிறார். மொத்த கூட்டமும் ஏமாற்றத்தில் அவரைத்திட்டி முணுமுணுக்கிறது. அந்த ஆள் அமைதியாக வந்து அவரிடம் நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கெட்கிறான். அவனை பார்த்து புன்னகைத்து விட்டு தன் மகளை வந்து கட்டிக்கொள்கிறார் "பழைய" ஜோவாய். தற்காப்புக்கலை ஆசிரியர் ஜோ-வைப் பாராட்டி தற்காப்புக்கலையின் முக்கிய பாடத்தை ஜோ இன்று கற்றுக் கொண்டார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அப்புறம் என்ன...நன்றி, வணக்கம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இறுதிக்காட்சியை உற்று நோக்கினால் நமக்கு அகிம்சையின் அர்த்தம் புலப்படும். நாமும் பல இடங்களில் "ஜோ"வாய் தான் இருக்கிறோம். ஆனால் பழைய ஜோவாய். நாம் வலிமை குறைந்தவர்களாய் இருக்கும் இடத்தில் எதோ பெரிய தியாகி போல் விட்டுக் கொடுப்பதாய் காட்டிக் கொள்கிறோம். ஆனால் நம்மை விட வலிமை குறைந்தவர்களை பார்க்கையில் நமக்குள் இருக்கும் அந்த ஆஜானுபாகான ஆள் விழித்து கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோவுக்கு அந்த நபரிடமிருந்து தேவைப்பட்டதெல்லாம் அவனுடைய நியாயமற்ற செயலுக்கு அவன் மன்னிப்பு கேட்பதுதான். அதை அவர் இறுதியில் சண்டையை கை விட்டதனால் மிக எளிதாக அடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி சொன்ன அந்த அருமையான வாழ்க்கைப் பாடத்தை யாரோ எனக்கு திரும்பவும் சொன்னதுபோல் இருந்த்தது. முடிந்தால் படத்தை ஒரு முறை பாருங்கள். படத்தை பார்த்து விட்டு கதை வேறு மாதிரி இருந்தால், என் ஆங்கில ஆசிரியரின் முகவரியைத் தருகிறேன். போய் அவரை திட்டிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, குழந்தைகளே! இன்னைக்கு என்னோட கருத்து இதான்,&lt;br /&gt;&lt;br /&gt;செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்&lt;br /&gt;காக்கின்என் காவாக்கால் என்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-576789390834063523?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/576789390834063523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=576789390834063523' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/576789390834063523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/576789390834063523'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/12/blog-post.html' title='நீங்கள் பழைய ஜோவா? புதிய ஜோவா?'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R1TJAdOxp-I/AAAAAAAAAEg/GB56k7ukEME/s72-c/Gandhi1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-5380510598226141349</id><published>2007-11-18T18:17:00.001-08:00</published><updated>2008-12-11T12:37:20.457-08:00</updated><title type='text'>சமையலறையில் ஒரு மாமல்லபுரம்</title><content type='html'>"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக்கண்டான்...எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" - பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். கேள்வி அதுவல்ல. எதனைக் கண்டான் சிற்பக்கலை வடித்தான்? மாமல்லபுரத்தில் ஒரு நாள் சுண்டலை மென்றுகொண்டிருந்த அந்த  கணத்தில் உதித்த கேள்வி இது. க.க-வைப் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே, கேள்வின்னு ஒன்னு வந்துட்டா பதில் கண்டு பிடிக்காமல் விட மாட்டான். இந்த கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சுட்டேன், எப்படின்னு கேக்கறீங்களா....வழக்கம் போல் இந்த வாரமும் ஒரு 'யுரேகா' தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வந்து விட்டால் காபியுடன் காரம், இனிப்பு சாப்பிடாவிட்டால் க.க-வுக்கு கோபம் தலைக்கேறிவிடும். எப்போதும் எனக்கு இந்த கோபம் வராமல் பார்த்துக் கொள்ளும் நண்பன் இந்த முறை சமையலறைக்கு வழி காட்டி விட்டு கணினியை கட்டிக் கொண்டு அழ சென்றான். சரி, இன்னைக்கு ஒரு வழி பண்ணி நமக்குள் ஒளிந்திருக்கும் 'நளனை' வெளியில் காட்டி விட வேண்டியதுதான். என்ன பண்ணலாம்????? ஆங், 'அவல் கேசரி'...அருமையான தேர்வு. ஒரு கல்யாண பந்தியில் இரண்டாம் முறை கேட்டும் முடியாது என்று சர்வரால் மறுக்கப்பட்டு அவமானத்தை தேடித்தந்த பதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பல தளங்களில் வெளியிடப்பட்ட 'அவல் கேசரி' செய்முறைகளை கலந்து ஒரு புதிய செய்முறையை எழுதிக்கொண்டு சமையலறையை நோக்கி பீடுநடை போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு கப் அவலை சிறிது நெய்யில் வறுக்கவும்.&lt;br /&gt;2. ஒன்னரை கப் பாலை கொதிக்கவிடவும்.&lt;br /&gt;3. கேசரி பவுடரையும், அவலையும் பாலில் கொட்டி வேகவிடவும்.&lt;br /&gt;4. ஒரு கப் சர்க்கரையும் நெய்யும் கலந்து கிளறவும்.&lt;br /&gt;5. சுவையான அவல் கேசரி தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் இல்லாத ஒரு ஸ்டெப்ப நானா ஆட் பண்ணது தப்பாப்போச்சுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மூனாவது ஸ்டெப் வரை 'ஸ்மூத்'தா ப்ராஜெக்ட் போய்க்கிட்டு இருந்துச்சு. சரி, அதுபாட்டுக்கும் வெந்துட்டு இருக்கட்டும் என்று தொ.கா- வை ஆன் செய்தேன். அட..நம்ம 'மும்ஸ்'..குஷி படத்துல என்னமா பெர்மான்ஸ் காட்டிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் அதில் மூழ்கி விட்டேன்(ஹி..ஹி..இதான் அந்த எக்ஸ்ட்ரா ஸ்டெப்)...லைட்டா ஏதோ கருகிய வாசம் நாசியைத் தொலைக்க 'ச்ச..இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல...அடுப்புல எதாவது வைக்க வேண்டியது..அப்புறம் எங்கயாவது வாயப்பொலந்துகிட்டு நிக்கிறது...இந்த க.க. மட்டும் இல்லண்ணா இந்த ரூமே அலங்கோலம் ஆகிடும்' என்று சிலாகித்து கொண்டு அடுப்பில் பார்த்தால் நம்ம 'அவல் கேசரி' வாங்க சார் எங்க இந்த பக்கம்? என்று கேட்டது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், 'அவல் கேசரி' திரவ நிலையிலிருந்து திட நிலையை எட்ட எடுத்துக் கொண்ட நேரம் சரியாக ஐந்து நிமிடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாய் சட்டியில் இருந்து பெயர்த்து தட்டில் கொட்டி விட்டேன். அதற்கு பிறகு ஆறியவுடன் தட்டில் இருந்து அதை எடுக்க நான் செய்த முயற்சியின் அத்தாட்சி-தான் இந்த புகைப்படம்( நன்றி : நாராயணன்...எங்கள் அறையின் ஆஸ்தான போ.கி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R0DzWc8CbaI/AAAAAAAAAEQ/qAq6YnQEJkw/s1600-h/Image079.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R0DzWc8CbaI/AAAAAAAAAEQ/qAq6YnQEJkw/s400/Image079.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5134371142253047202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே குழந்தைகளே 'அவல் கேசரி செய்தான்..சிற்பக்கலை படைத்தான்'...எனக்கு மும்ஸ் மாதிரி அவனுக்கு யாரு உதவி செஞ்சாங்கன்னு தெரியல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-5380510598226141349?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/5380510598226141349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=5380510598226141349' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5380510598226141349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5380510598226141349'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/11/blog-post_18.html' title='சமையலறையில் ஒரு மாமல்லபுரம்'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/R0DzWc8CbaI/AAAAAAAAAEQ/qAq6YnQEJkw/s72-c/Image079.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-8687583049872001679</id><published>2007-11-14T20:47:00.000-08:00</published><updated>2007-11-14T20:49:19.466-08:00</updated><title type='text'>பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வார்த்தை</title><content type='html'>நண்பர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது...இதாங்க டாபிக் : ஆங்கிலத்தில் மிகப்பெரிய வார்த்தை எது மற்றும் மிகச்சிறிய வார்த்தை எது? விக்கி, கூகிள் என்று ஆளாளுக்கு தேடி சண்டை போட்டுக்கொண்டிருக்க, வழக்கம் போல தப்பாய் சில பதில்களை சொல்லி விட்டு சில பல பல்புகளை சுமந்து ஒரு ஓரமாய் அமர்ந்து விட்டத்தை பார்த்தபடியே என் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் இருந்த பெரிய கேள்வி இதாங்க : தமிழில் பெரிய வார்த்தை எது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் லெக்ஸிகான், விக்கி, கூகிள் மற்றும் எனக்கு தெரிந்த சில தமிழ் பேசும் தளங்களில் தேடித்தீர்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பதில் தெரியாமல் படுத்தால் தலை வெடித்து விடும் போலிருந்தது. சரி, இதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் என் தமிழாசிரியர் ஒருவரால் தான் இது முடியும் என்று அவர் தொலைபேசி எண்ணை தேடினேன். அப்பொழுது எதார்த்தமாக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். ஏதோ ஒரு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது....உற்றுப்பார்த்தேன், யுரேகா!!!! கண்டுபிடித்து விட்டேன்..தமிழின் பெரிய வார்த்தையை கண்டே பிடித்து விட்டேன்.(டேய், பில்டப்ப விடு...மேட்டருக்கு வா)&lt;br /&gt;&lt;br /&gt;இதாங்க அந்த சீன்:(சண்டையிட்டு பிரிந்த நாயகனும் நாயகியும் இறுதியில் சேரும்போது பேசிக்கொள்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி: அத்தான்!!!&lt;br /&gt;நாயகன்: கண்ணே, உனக்கு துரோகம் செய்து நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன், தயவு செய்து என்னை மன்னித்து விடு&lt;br /&gt;நாயகி: அன்பே, என்ன இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசுகிறீர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே குழந்தைகளே, தமிழில் பெரிய வார்த்தை 'என்ன மன்னிச்சிடுங்க'...வேணும்னா, யார்கிட்டயாவது சொல்லிப்பாருங்க, அவங்களும் இதையேதான் சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி வாங்குன பல்ப தொடச்சி வச்சிட்டு போய் வேற வேலய பாருங்கப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-8687583049872001679?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/8687583049872001679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=8687583049872001679' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/8687583049872001679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/8687583049872001679'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/11/blog-post.html' title='பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வார்த்தை'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-5922536794939410632</id><published>2007-09-30T18:39:00.000-07:00</published><updated>2007-09-30T19:08:34.713-07:00</updated><title type='text'>வாகைத்திணையில் சமீபத்தில் நான் ரசித்த மூன்று பாடல்கள்:</title><content type='html'>1. அட இதுதாம்பா உங்க தேசிய விளையாட்டு என்று ஆசியக்கோப்பையை வென்று நமக்கு ஞாபகப்படுத்திய இந்திய ஹாக்கி அணி( தோடா, நக்கல பாரு...ஹாக்கி ஸ்டிக்க புடிச்சி பாரு அப்ப தெரியும்...).&lt;br /&gt;&lt;br /&gt;2. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என வலுவான அணிகளை வென்று 20க்கு20 உலகக்கோப்பையை கைப்பற்றிய 'இள இரத்தம் பாய்ந்த' இந்திய கிரிக்கெட் அணி.&lt;br /&gt;&lt;br /&gt;3. சிங்கம் சிங்கிளாதான் வரும் - என்று மெக்சிகோவில் சீறிக்காட்டி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நம் விஸ்வநாதன் ஆனந்த்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-5922536794939410632?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/5922536794939410632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=5922536794939410632' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5922536794939410632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/5922536794939410632'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/09/blog-post_30.html' title='வாகைத்திணையில் சமீபத்தில் நான் ரசித்த மூன்று பாடல்கள்:'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-9153624286744052305</id><published>2007-09-08T01:10:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:21.070-08:00</updated><title type='text'>அடிக்கல உதைக்கல ஆனா உசுர மட்டும் உருவி எடுத்துட்டாங்கய்யா</title><content type='html'>"டேய், பஸ்ல போகும்போது படியில் நிக்கக்கூடாது...மொட்டை மாடியில நின்னு எட்டிப்பார்க்காதே..விழுந்து கிழுந்துட போற...சைக்கிள்ல போகும்போது ஏண்டா இப்படி வேகமா போற?...மோதி கீதி தொலையப்போற" - என்று இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு மாவீரனை,&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டில் நாய் நின்றால் அதற்கு மரியாதை கொடுத்து(பயத்துல மரியாதை அதுவா வரும்) வேறு தெரு வழியாக செல்லும் அஞ்சாத சிங்கத்தை,&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் வெளியில் தனியாக சென்றால் ஒற்றைக் கண்ணன் வந்து பிடித்துக் கொள்வான் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு முரட்டுக்காளையை &lt;br /&gt;&lt;br /&gt;(அட..இத்தனை பில்டப்பும் சாட்சாத் இந்த 'கருத்து கணேசனுக்குத்தான்')&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அவனது நண்பர்கள் பார்த்து, "ஏண்டா, வெண்ணை..இந்த ஞாயிற்றுக்கிழமை சும்மாதான இருக்க, நாங்க வெளியில போலான்னு இருக்கோம், எங்க கூட வர்றியா?"னு &lt;br /&gt;விளையாட்டா கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா, இது நம்மளயெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக்கேட்குறாங்களேன்னு உடனே ஓ.கே. சொல்லிட்டேன்".&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அவங்க என்ன அழைச்சுட்டு(உள்ளபோகும்போது உண்மையிலேயே என்ன இழுத்துட்டுத்தான் போனாங்க) போன இடம் 'SIX FLAGS'(நியூ ஜெர்சி)....அட இந்த ஊரு &lt;br /&gt;கிஷ்கிந்தா..MGM தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ள கொண்டுபோய் 'கிங்டக்கா'ன்னு(kingda ka) சொல்லி சின்ன பொட்டியில உக்காரச் சொன்னாங்க. நானும் நம்பி உக்காந்துட்டேன். எடுத்தாங்கய்யா வண்டிய 128 மைல் வேகத்துல...அந்த வேகத்துல கன்னத்துல சதை மட்டும் கொஞ்சம் அதிகமா இருந்தா பிச்சிக்கிட்டு போயிருக்கும்.ஒல்லியா இருந்ததுனால தப்பிச்சேன். மேல கொண்டு போய் ஒரு செகண்டுதான் நிறுத்துனாங்க.அவ்வளவுதான், சின்னவயசுல பாஸ் ஆகிட்டு சூடம் ஏத்தாம ஏமாத்தின பக்கத்து தெரு பிள்ளையாரிலிருந்து வேண்டுமென்றே டைம்பாஸ்க்கு மொக்கை போட்டு அதில் காதில் ரத்தம் வர்ற அழுத நண்பர்கள் என நான் செய்த பாவங்கள் ஒன்றொன்றாய் நினைவில் வர மொத்தமாய் ஒரு மன்னிப்பு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஒரு கணப்பொழுதுதான். அடுத்த செகண்டுலயே தலைகுப்புற தள்ளி விட்டாங்க நாலஞ்சு பனைமர உயரத்துலருந்து. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்க்கு வந்ததுபோல் இருந்தது. 'ஹைய்யா','ஹாஹா','வாவ்','ப்யூட்டிபுல்' என்று எல்லோரும் சந்தோசத்தில் கத்த(தலைகுப்புற தள்ளி விட்றாங்க, இது ஒரு சந்தோசமா? கலிமுத்திப்போச்சு) "அம்மா..." என்று ஒரு ஈனகுரல் கேட்டது. சொல்லவே தேவையில்லை. அந்த குரலுக்கு சொந்தக்காரன் மகாகணம் பொருந்திய இந்த கருத்து கணேசன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு மூணு பிரட்டு பிரட்டி கொண்டு வந்து ஒரு வழியா நிறுத்தினாங்க. எங்கய்யா என் உயிருனு கேட்டா, 'அந்த ரெட்டப்பாலத்துல விழுந்துச்சே எடுத்துக்கலயா?' என்று விவேக் &lt;br /&gt;ஸ்டைலில் நக்கலடிச்சாங்க. உயிரின் மகத்துவத்தை ஒரு நொடியில் புரிய வைத்த 'கிங்டக்கா' நீ எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லி அந்த இடத்திலிருந்து மெல்ல நகர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப ஓவரா பேசுரன்னு நெனச்சா கொஞ்சம் கீழ இருக்க 'கிங்டக்கா' வீடியோ பாருங்க புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=HN8nv4tVFuA&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJhiDzw62I/AAAAAAAAACA/A3hPZ9ZrQhM/s1600-h/kingdaka.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJhiDzw62I/AAAAAAAAACA/A3hPZ9ZrQhM/s200/kingdaka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5107752165157432162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கயாவது ஒளிஞ்சிக்க இடம் இருக்கானு தேடிப்பார்த்துட்டு இருக்கும்போது, சட்டையைப்பிடித்து கொண்டுபோய் 'சூப்பர்மேன்' ரைடுன்னு ஒன்னுல கோத்து விட்டுட்டாங்க.(அதான் கிளியரா எழுதியிருக்கான் 'சூப்பர்மேன்'னு..அப்புறம் ஏண்டா என்னை ஏத்துறீங்க?) அட...இதப்பத்தி எழுத நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. நம்மூர்ல ரோடு போடற இடம்,வீடு கட்டற இடத்துல எல்லாம் கலவை, ஜல்லி கலக்க ஒரு மிஷின் இருக்கும் பார்த்துருக்கீங்களா?...அதுக்குள்ள மாட்டுன ஜல்லியா நம்மள மாத்துற ரைடுக்கு பேர்தான் "சூப்பர்மேன்" ரைடு.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர்மேன் : http://www.youtube.com/watch?v=f5II-Px1Xq8&lt;br /&gt;பேட்மேன்  : http://www.youtube.com/watch?v=OPZ0pHzJbjQ&lt;br /&gt;நைட்ரோ   : http://www.youtube.com/watch?v=GIP8M-iME2s&lt;br /&gt;&lt;br /&gt;பசிக்குதுடானு பிரண்ட பாத்து கேட்டேன். இது ஒரு தப்பா?? வாடா ஆம்லெட் சாப்பிடலான்னு கூட்டிட்டு போய் "பேட்மேன்"-ல தொங்க விட்டுட்டான். ஒன்னும் புரியாம முழிச்சிட்டு ஏறி உக்கார்ந்தேன். ரெண்டு நிமிஷ்ந்தான்..சோலி முடிஞ்சுப்போச்சு. வயித்துக்குள்ள ஆம்லெட் போட வச்சுட்டாங்க. உசுர கெட்டியா புடிச்சுட்டு ஒரு வழியா இறங்கி வந்தேன். அடுத்து 'நைட்ரோ'நு ஒரு சாகச விளையாட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் கால்ல விழாத குறையா கெஞ்சி, அடம் புடிச்சி வரலனு சொல்லி ஒரு ஓரமா உக்காந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJhvjzw63I/AAAAAAAAACI/Lw1WToW676g/s1600-h/superman.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJhvjzw63I/AAAAAAAAACI/Lw1WToW676g/s200/superman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5107752397085666162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்க இருந்ததுலயே எனக்கு பிடிச்சது கார் விளையாட்டுதான். காரை விட்டு இறங்கி வந்தா 'என்னடா மச்சி...குழந்தைங்க ரைடுல நீ போயிட்டு வர்ற"னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJh9Dzw64I/AAAAAAAAACQ/IeBKq-szIsA/s1600-h/batman.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJh9Dzw64I/AAAAAAAAACQ/IeBKq-szIsA/s200/batman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5107752629013900162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தப்பிச்சோம், பொழைச்சோம்னு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தேன். இனிமே சனி, ஞாயிறு சாப்பிட்டு வீட்ல அமைதியா பொழுத கழிக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸில் சக ஊழியர், " என்ன சார், எப்படி ஒருந்தது உங்க சிக்ஸ் ப்ளாக்ஸ் ட்ரிப்?" என்று கேட்க சுற்றி முற்றி என் நண்பர்களை தேடினேன். அப்பாடா யாரும் இல்லை."இட் வாஸ் &lt;br /&gt;பென்டாஸ்டிக்...ஐ ரியலி என்ஜாய்டு இட்...கண்டிப்பா இன்னொரு தடவை போகலான்னு இருக்கேன். நீங்க மிஸ் பண்ணாம போயிட்டு வந்துடுங்க" என்று அளந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், உங்களுக்காக உயிரக்கூட விடத்தயார்னு யாராவது டயலாக் விட்டா அவங்கள டெஸ்ட் பண்ண சரியான இடம் இந்த "சிக்ஸ் ப்ளாக்ஸ்".&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே குழந்தைகளே, இன்னைக்கு என்னோட கருத்து இதான்:&lt;br /&gt;&lt;br /&gt;சனி, ஞாயிறு லீவு விட்டா அம்மா பொங்கி போடுறத சாப்பிட்டுட்டு அமைதியா வீட்ல இருங்க. அத விட்டு பிரண்ட்ஸ் கூப்பிடறாங்கன்னு சொல்லி என்னை மாதிரி வில்லங்கத்துல &lt;br /&gt;மாட்டிக்காதீங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-9153624286744052305?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/9153624286744052305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=9153624286744052305' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/9153624286744052305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/9153624286744052305'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/09/blog-post.html' title='அடிக்கல உதைக்கல ஆனா உசுர மட்டும் உருவி எடுத்துட்டாங்கய்யா'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RuJhiDzw62I/AAAAAAAAACA/A3hPZ9ZrQhM/s72-c/kingdaka.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-4584496465242869033</id><published>2007-08-27T19:32:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:21.570-08:00</updated><title type='text'>ஆதலினால் காதல் செய்வீர்!!!</title><content type='html'>கல்லூரிக் காலங்களில் இருந்தே காதல் கவிதைகளிலும், காதல் கதைகளையும் தாமரை இலை தண்ணீராய்த் தான் ரசித்து வந்திருக்கிறேன்...இன்றளவும் அவ்வாறே உணர்கிறேன். சமுதாயத்தை மையப்படுத்தும் கவிதைகளே என்னை எளிதில் கவர்ந்திருக்கின்றன.(அதெல்லாம் அனுபவித்திருந்தால் தெரியும் என்கிறீர்கள்..புரிகிறது).&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtOSWjzw60I/AAAAAAAAABw/wytSBnjLPUY/s1600-h/thabushankar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtOSWjzw60I/AAAAAAAAABw/wytSBnjLPUY/s200/thabushankar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5103583719008037698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் அபூர்வமாய் காதல் கவிதைகளும் என் மனதில் இருக்கை கேட்டதுண்டு. அப்படி ஒரு படைப்பு இங்கே. படைப்புக்கு சொந்தக்காரர் தபூ.சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று&lt;br /&gt;&lt;br /&gt;நீ குடை&lt;br /&gt;விரித்ததற்காக&lt;br /&gt;கோபித்துக் கொண்டு&lt;br /&gt;நின்றுவிட்ட&lt;br /&gt;மழையைப்&lt;br /&gt;பார்த்தவனாகையால்&lt;br /&gt;&lt;br /&gt;இன்று&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று மழை&lt;br /&gt;நின்றால்&lt;br /&gt;நீ எங்கோ குடை&lt;br /&gt;விரிப்பதாகவே&lt;br /&gt;நினைத்துக்&lt;br /&gt;கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtOShTzw61I/AAAAAAAAAB4/Sm60FJk_Skk/s1600-h/Subramanya_Bharathi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtOShTzw61I/AAAAAAAAAB4/Sm60FJk_Skk/s200/Subramanya_Bharathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5103583903691631442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல் முன்பொரு முறை அறிமுகமாகி, ஆனால் இந்த நிமிடம் வரை புத்தம் புதிதாகவே நான் உணர்கிற பாரதியின் இந்த வரிகள்...'அடடா இந்த பீலிங்-க மிஸ் பண்ணிட்டியேடா கணேசா' என்று உச் கொட்ட வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா!&lt;br /&gt;  சூரிய சந்திரரோ?&lt;br /&gt;வட்டக் கரியவிழி - கண்ணம்மா!&lt;br /&gt;  வானக் கருமைகொல்லோ?&lt;br /&gt;பட்டுக் கருநீலப் - புடவை&lt;br /&gt;  பதித்த நல்வயிரம்&lt;br /&gt;நட்ட நடுநிசியில் - தெரியும்&lt;br /&gt;  நட்சத்திரங்களடீ&lt;br /&gt;&lt;br /&gt;சோலை மலரொளியோ - உனது&lt;br /&gt;  சுந்தரப் புன்னகைதான்?&lt;br /&gt;நீலக் கடலலையெ - உனது&lt;br /&gt;  நெஞ்சி லலைகளடீ!&lt;br /&gt;கோலக் குயிலோசை - உனது&lt;br /&gt;  குரலி னிமையடீ!&lt;br /&gt;வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!&lt;br /&gt;  மருவக் காதல்கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-4584496465242869033?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/4584496465242869033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=4584496465242869033' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/4584496465242869033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/4584496465242869033'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/08/blog-post_27.html' title='ஆதலினால் காதல் செய்வீர்!!!'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtOSWjzw60I/AAAAAAAAABw/wytSBnjLPUY/s72-c/thabushankar.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-8147925622836815135</id><published>2007-08-25T19:43:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:21.951-08:00</updated><title type='text'>என்று தணியும் உங்கள் குருதி தாகம்?</title><content type='html'>கோயம்புத்தூர், மும்பை...இப்போது ஹைதராபாத். பயங்கரவாதத்தின் இரத்த தாகத்திற்கு நம் சகோதரர்கள் 41 பேரை இன்று இழந்திருக்கிறோம். வெறித்தனம்,வன்முறை,பயங்கரவாதம்,தீவிரவாதம்...இப்படி எந்த பெயர் வேண்டுமானால் இருக்கட்டும். என்னால் இதை சுத்தமான 'கோழைத்தனம்' என்றுதான் அழைக்க முடிகிறது. ஏ கோழைகளே! விடுமுறையை கொண்டாட லேசர் ஷோ பார்க்க வந்த சிறுமி,தன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞன் - இவர்கள் எப்படி உங்கள் லட்சியத்திற்கு &lt;br /&gt;குறுக்கே வந்தார்கள்? இப்படி நீங்கள் அடைய விரும்புவது எதை?&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtDrmzzw6zI/AAAAAAAAABo/0xKlLn9RY6s/s1600-h/Hyd.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtDrmzzw6zI/AAAAAAAAABo/0xKlLn9RY6s/s200/Hyd.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5102837429785652018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மூலகாரணம் அந்நிய சக்திகளாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சில பல லட்சங்களுக்கு துணை போகும் நமக்குள் ஒளிந்திருக்கும் அந்த களைகள் தான் முதலில் களையப்பட வேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்குக்கு தீர்வு சொல்ல எப்படியும் இன்னும் 10,12 வருடங்கள் ஆகும். இதற்குள் குற்றவாளிகளுக்கு மதச்சாயம் பூசி அவர்கள் செயலை நியாயப்படுத்த சில அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி கொண்டிருக்கும். ஆனால் இந்த வெடிகுண்டின் வெளிச்சத்தில் இருட்டாகி போன இந்த குடும்பங்களுக்கு என்ன தான் தீர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;உதயம் தியேட்டர் அருகில் காசு குறைத்து கேட்டதற்காக எல்லார் முன்பும் என்னை அசிங்கமாக திட்டிய ஆட்டோக்காரனைக் கூட என்னால் சத்தியமாக இந்த சம்பவத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் மகன், சகோதரன், தாய் என தன் சொந்தங்களை இந்த வெடிகுண்டு விபத்தில் பறிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்,இருப்பவர்கள் நிம்மதியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-8147925622836815135?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/8147925622836815135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=8147925622836815135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/8147925622836815135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/8147925622836815135'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/08/blog-post_25.html' title='என்று தணியும் உங்கள் குருதி தாகம்?'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cCJqkZgl3-w/RtDrmzzw6zI/AAAAAAAAABo/0xKlLn9RY6s/s72-c/Hyd.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-913536224238881223</id><published>2007-08-24T23:01:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:22.139-08:00</updated><title type='text'>கலாம் மொழி</title><content type='html'>நான் கல்லூரியில் படிக்கும்போது கேட்டு கேட்டு புளித்துப்போன உறுதிமொழிகள்: மச்சி, இந்த நியூ இயர்லேருந்து தண்ணி,தம்ம விடப் போறேன்டா...அவள இனி பார்க்கவே போறதில்லடா.. இந்த செம்ல இருந்து ஆல் கிளியர் ஆகப் போறேன்...இனி வர சண்டே எல்லாம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா கேட்டுக்கு படிக்கப் போறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs_TFjzw6xI/AAAAAAAAABY/Q2clEwXuDWE/s1600-h/kalam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs_TFjzw6xI/AAAAAAAAABY/Q2clEwXuDWE/s200/kalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5102528995299224338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றிலும் நான்,எனது - என்பவைதான் மேலோங்கியிருக்கும். ஆனால் இந்த வட்டங்களை தாண்டி சமுதாய நோக்கோடு எடுக்கப்படும் உறுதி மொழிகள் மிகச்சில. மாணவர்கள் கடை பிடிக்க திரு. அப்துல் கலாம் அவர்களின் இந்த உறுதிமொழிகளும் அத்தகையதே.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன். உழைத்து படித்து, லட்சியத்தை அடைய முயற்சிப்பேன். விடுமுறை நாளில் ஐந்து பேருக்கு, எழுத, படிக்க சொல்லித் தருவேன். வீடு, பள்ளி, கல்லுாரியில் குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, வளர்த்து பாதுகாத்து மரமாக்குவேன். மது, போதை பழக்கத்தால் துயரப்படும் ஐந்து பேரையாவது, மீட்க பாடுபடுவேன். துயரத்தோடு உள்ள ஐந்து பேருக்கு ஆறுதல் கூறி துயரத்தை நீக்க பாடுபடுவேன். ஜாதி, மத, மொழியின் பெயரில் எந்தவொரு பாகுபாடும் பாராட்டாது எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்வேன். வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயற்சிப்பேன். என் தாய், தாய் நாட்டை நேசித்து, பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பேன். [நன்றி:தினமலர்]&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்து பார்க்கையில் இவை மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லையெனப் புலப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-913536224238881223?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/913536224238881223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=913536224238881223' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/913536224238881223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/913536224238881223'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/08/blog-post_24.html' title='கலாம் மொழி'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs_TFjzw6xI/AAAAAAAAABY/Q2clEwXuDWE/s72-c/kalam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-42792606777959657.post-998164313437493056</id><published>2007-08-23T21:35:00.000-07:00</published><updated>2008-12-11T12:37:22.416-08:00</updated><title type='text'>இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சொல்லுங்க விஸ்வநாதன் சார்</title><content type='html'>இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மிகக் கஷ்டமான வேலை எதுவென்றால் அது நிச்சயமாக மக்களவை சபாநாயகர் வேலைதான். நான் படித்த கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் விஸ்வநாதன் என்றொரு தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் வந்து நின்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படிக்கும் பள்ளியில் குண்டூசி விழும் ஓசை கூட கேட்கும். அந்த அளவுக்கு பள்ளியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அவர் கூட நம் மக்களவை உறுப்பினர்களிடம் கட்டாயம் தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமை மீறி கடைசியில் இன்று புலம்பித் தள்ளியிருக்கிறார் திரு.சோம்நாத் சாட்டர்ஜி."அடப் போங்கய்யா, இவங்களுக்கு சின்ன புள்ளைங்க தேவலாம். அதுங்க கூட கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கும்".[பார்க்க:http://www.ibnlive.com/news/parties-shield-mps-veto-punishment-proposal/47353-3.html]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs5n9Dzw6wI/AAAAAAAAABQ/k2cv_jelbLM/s1600-h/somnath248.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs5n9Dzw6wI/AAAAAAAAABQ/k2cv_jelbLM/s200/somnath248.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5102129726549453570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயத்தக் கேட்டா இன்னும் பகீர்ங்குது. ஒரு நிமிஷத்துக்கு மக்களவை நடக்க ஆகும் செலவு மட்டும் 22,089 ரூபாயாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாளர் MP அவர்களே உங்களிடம் இரண்டு கேள்விகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் களேபரம் செய்யும் இந்த இடத்தில் தான் நேரு,லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரும் சேர்ந்து பேசினால் யாருக்கும் எதுவும் புரியாது என்று சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அது ஏன் லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கிய உங்களுக்கு புரியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சிரிக்கிறீர்கள்? புரிகிறது..அதை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களிடமே போய் கேட்க சொல்கிறீர்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/42792606777959657-998164313437493056?l=karuthuganesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karuthuganesan.blogspot.com/feeds/998164313437493056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=42792606777959657&amp;postID=998164313437493056' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/998164313437493056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/42792606777959657/posts/default/998164313437493056'/><link rel='alternate' type='text/html' href='http://karuthuganesan.blogspot.com/2007/08/blog-post.html' title='இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சொல்லுங்க விஸ்வநாதன் சார்'/><author><name>மா.கணேஷ் குமார்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cCJqkZgl3-w/Rs5n9Dzw6wI/AAAAAAAAABQ/k2cv_jelbLM/s72-c/somnath248.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
